சைவம்

ருசியான சாமை சாம்பார் சாதம்

தேவையான பொருட்கள்:
சாமை அரிசி – ஒரு கப்
துவரம் பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று (அ)
சாம்பார் வெங்காயம் – 10
தக்காளி – 3
கறிவேப்பிலை – சிறிது கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், உருளை, வாழைக்காய் கலந்து – ஒரு பெரிய கப் சாம்பார் பொடி (மிளகாய் + தனியா) – 3 தேக்கரண்டி நெய் – 2 தேக்கரண்டி உப்பு – சுவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிது தாளிக்க: கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு மிளகாய் வற்றல் – 2 பெருங்காயம் – சிறிது எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி செய்முறை: *சாமை அரிசி மற்றும் துவரம் பருப்பைச் சுத்தம் செய்து ஊற வைக்கவும். காய்களை நறுக்கி வைக்கவும். *குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். பிறகு உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து சிவக்கவிட்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். *வதங்கியதும் நறுக்கிய காய் கலவையைச் சேர்த்து (வதங்க அதிக நேரம் எடுக்கும் காய்களை முதலில் சேர்த்து சிறிது வதக்கிய பிறகு மற்ற காய்களைச் சேர்த்து வதக்கலாம்), தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். *பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். *அதனுடன் தூள் வகைகளைச் சேர்த்து நன்றாகப் பிரட்டிவிட்டு, 4 முதல் 4 1/2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அரிசி, பருப்புக் கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி சிம்மில் 15 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். கடைசியாக நெய் விட்டு கலந்து கொள்ளவும். *சுவையான சாமை சாம்பார் சாதம் தயார்.

99d5cbe0 ea95 4128 a7c4 79da6f833c30 S secvpf.gif

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button