சமையல் குறிப்புகள்

தயிர் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

இன்றிரவு ன்ன சைட் டிஷ்களை செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் வீட்டில் இதுவரை செய்யாத சமையல் குறிப்புகளைப் பற்றி யோசிக்கிறீர்களா? வீட்டில் தயிர் இருக்கிறதா? பிறகு கத்திரிக்காய் குழம்பு செய்யவும். இந்த குழம்பு வட இந்தியாவில் மிகவும் பிரபலம். மேலும் இது எவரும் உண்ணக்கூடிய சுவையானது.

தயிர் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தயிர் கத்தரிக்காய் குழம்புக்கான எளிய செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தயவுசெய்து படித்து, சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் – 5 (நறுக்கியது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* தயிர் – 1 கப்

* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1-1/2 டீஸ்பூன்

* சோம்பு பவுடர் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* உப்பு – சுவைக்கேற்ப

* வரமிளகாய் – 3

* எள்ளு விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – தேவையான அளவு

* சீரகம் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* கிராம்பு – 2

* ஏலக்காய் – 2

* பிரியாணி இலை – 1

* பட்டை – 1 இன்ச்

* கறிவேப்பிலை – சிறிது

* இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள் ஸ்பூன்curd brinjal gravy 16

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பௌலில் தயிர், கடலை மாவு சேர்த்து கட்டிகள் சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகள் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் உளுத்தம் பருப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் தயிர் கடலை மாவு கலவை, மசாலாப் பொடிகள் என அனைத்தையும் சேர்த்து ஒருசேர கிளறி விட வேண்டும்.

* பின்னர் வதக்கி குளிர வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலாவுடன் கத்திரிக்காய் நன்கு ஒன்றுசேரும் வரை கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தயிர் கத்திரிக்காய் கிரேவி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button