அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

பனிக்காலத்தில் சருமத்தைப் பொலிவாக்க சில டிப்ஸ்!

contentகுளிர் காலத்தில் உண்டாகும் சருமக் குறைபாடுகளை எதிர்கொண்டு சருமத்தின் அழகை உலகிற்கு காண்பிக்க சில எளிய வழிகளை முயற்சிக்கலாம்.

குளிர் காலத்தில் நிலவும் வெப்பநிலை எந்த வகையான சருமத்திற்கும் உகந்ததாக இருக்காது. இது சரும வறட்சி,சுருக்கங்கள்,பொலிவற்ற தோற்றம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள், குளிர் காலத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் முட்டையின் வெள்ளை கருவை நன்றாக அடித்து மாஸ்க் போல முகத்‌தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் இருக்கும் சோர்வு மறைந்து பட்டு போல் பிரகாசிக்கும்.

அதேபோல ஓட்ஸ், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழும்போது உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெற்று பொன்போல மின்னும்.Untitled-8 copy

வறண்ட சருமம் உள்ளவர்கள், வாழைப்பழத்தை மசித்து அதனோடு பால் ஆடை மற்றும் தேன் கலந்து இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோல பப்பாளி பழத்தை மசித்து, முட்டையின் வெள்ளை கரு மற்றும் தயிரோடு சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் சுருக்கங்கள் நீங்கி சருமம் மிருதுவானதாக மாறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button