சமையல் குறிப்புகள்

சன்னா பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:

* சன்னா – 1 கப்

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்

Related Articles

* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* காய்ச்சிய பால் – 1/4 கப்

* மலாய் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்

* உலர்ந்த வெந்தய கீரை – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு…

* வெண்ணெய் – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 2 (நறுக்கியது)

* தக்காளி – 3 (நறுக்கியது)

* முந்திரி – 6

* பச்சை மிளகாய் – 1

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

செய்முறை:

* முதலில் சன்னாவை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். சன்னாவானது நன்கு மென்மையாக வெந்திருக்க வேண்டும். ஒருவேளை வேகவில்லை என்றால் மீண்டும் ஒரு 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைக்கவும்.

* பிறகு வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், சேர்த்து வதக்கி, பின் அரைத்ததை சேர்க்கவும்.

* பின் அதில் மல்லித் தூள் மற்றும் பால் ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

* அதன் பின் வேக வைத்துள்ள சன்னாவை வேக வைத்த நீருடன் ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* இறுதியில் கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை, பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே சிறிது வெண்ணெயைப் போட்டு மூடி வைத்தால், சுவையான சன்னா பட்டர் மசாலா தயார்.

குறிப்பு:

* உங்களுக்கு சற்று இனிப்புச் சுவை வேண்டுமானால், அதில் சிறிது சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.

* விருப்பமுள்ளவர்கள் முந்திரியை தனியாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

* ஒருவேளை சன்னாவை இரவு நேரத்தில் ஊற வைக்க மறந்துவிட்டால், பகலில் நல்ல சூடான நீரில் சன்னாவைப் போட்டு, 5-6 மணிநேரம் மூடி வைத்து ஊற வையுங்கள்.

* க்ரீம் இல்லாதவர்கள், அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

* முந்திரி இல்லாவிட்டால், அதற்கு பதிலாக பாதாமை சேர்த்துக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button