சமையல் குறிப்புகள்

முருங்கைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* முருங்கைக்காய் – 1 (நீளத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

Related Articles

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* துவரம் பருப்பு – 1 கப்

* கறிவேப்பிலை – சிறிது

* மல்லி – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்

* வெந்தயம் – 1/4 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கெட்டியான புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 4

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* நல்லெண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

* நெய் – 2 டீஸ்பூன்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]sambar 1626167950

செய்முறை:

* முதலில் துவரம் பருப்பை நீரில் 15 முதல் 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் துவரம் பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் போதுமான அளவு நீரை ஊற்றி 10 நிமிடம் காய்கறி வேகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மல்லி, வெந்தயம், பெருங்காயத் தூள், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, காய்கறி வேக வைத்த நீரை சிறிது ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அரைத்த மசாலாவை வெங்காயம் தக்காளி உள்ள வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* சாம்பார் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து மீண்டும் சாம்பாரை ஒரு 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான கோயம்புத்தூர் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button