போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று இல்லாதவர் என்றும், போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்றும் வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, போப் பிரான்சிஸ் சமீபகாலமாக வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார்.