பிரபல போஜ்புரி நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர் இறப்பதற்கு முன், அந்த நடிகையுடன் அவரது ஹோட்டலுக்கு சென்ற ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா டார்பி தனது ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது சந்தீப் சிங், நடிகை இறப்பதற்கு முன், அந்த நடிகையுடன் ஹோட்டலுக்கு வரும் காட்சிகள் சிசிடிவியில் வெளியாகின.
நடிகை அகன்ஷா துர்வேயுடன் ஹோட்டலில் 17 நிமிடங்கள் கழித்த பிறகு அந்த நபர் காரில் ஏறியது தெரியவந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.