சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி முன்னாள் மற்றும் தற்போதைய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கலாஷேத்ராவில் 2015 முதல் 2019 வரை படித்த மாணவிகள் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனவே, நான்கு பிரதிவாதிகளில் ஒருவரான உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த ஹரி பத்மன் தலைமறைவானார். அவரது மொபைல் போனும் அணைக்கப்பட்டிருந்தது. இன்றும் அவரை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹரி பத்மன் கைது குறித்து கிண்டலாக பதிவிட்ட நெட்டிசன் ஒருவருக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்து கேள்வியால் டேக் செய்தார்.
அந்த ட்வீட்டில், ”இவர் அய்யர் மிகவும் நல்லவர். மாமி @KasthuriShankar வாங்க கருத்து சொல்லுங்க?” என்று சரவணன் என்பவர் கிண்டல் செய்திருந்தார்.
அதற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி ” Kalakshetra பெண்களுக்கு நீதியை விட யார் என்ன ஜாதி என்பதே த்ராவிடியான்ஸ்சுக்கு முக்கியமாக உள்ளது. Hari padman அய்யர் இல்லை. நீர்தான் பொய்யர். ரொம்ப கேவலமானவர்.
Dravidiyas for a reason! பி. கு: ஒருவர் மாமியென்றால் no problem. உன்னை போல் மாமாவாக இருப்பது தான் அசிங்கம்” என்று இவ்வாறு கொந்தளித்துள்ளார் கஸ்தூரி.
நடிகை கஸ்தூரியை பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு சிலர் அவ்வப்போது அவரை பாஜக சம்மந்தப்பட்ட விவகாரத்தில் வம்பு இழுத்து வருகின்றனர். அவரும் அதற்கு காட்டமான பதிவுகளால் விளாசி வருகிறார்.