மருத்துவ குறிப்பு

மூக்கடைப்பிற்க்கான சித்த மருந்து

1 . வேம்பு
வேம்பின் நெய்யைப் பூச பெரும் வளி நோய் வகைகள், கழலைகள், கரப்பான், சிரங்கு, முன்னிசிவு, சுரம் ஆகியவைகள் போம்.

வேப்பெண்ணெயை இரும்புக் கரண்டியில் விட்டுக் காயவைக்கவும்.
எருக்கனிலையைக் கற்றையாய்ச் சுருட்டிக் கட்டி ஒரு புறத்தைத் தட்டையாகக்
கத்தரிக்கவும். அதைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் தோய்த்து
ஒற்றடமிடப் பிடரிவலி, நரம்பு, உடல் குத்து, முப்பிணியில் காணும் வலிகள்
தீரும்.

வேப்பெண்ணெய் சேர்ந்த ஐங்கூட்டு நெய்யால் பெருவளிநோய் கூட்டம், முன்னிசிவு, பின்னிசிவு, முப்பிணி முதலியன தீரும்.

தனித்த நெய்யைக் கீல்வாயுவுக்கு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம்.

வேப்பம் பிண்ணாக்கை இடித்துப்பொடித்து வறுத்து ஒற்றடமிட முப்பிணி, வளிநோய், தலைவலி முதலியன நீங்கும்.

பிண்ணாக்கைச் சுட்டுப் பொடி செய்து முகர மூக்கினின்றும் நீர்வடியும், தும்மலுண்டாகும், தலைவலி, முப்பிணி தீரும்.

வேப்பம்பட்டை 4 கிராம், திப்பிலி 8 கிராம் சேர்த்தக் குடிநீரை இடுப்புவாதம், கீல்வாயு நோய்களுக்கு வழங்கலாம்.

வேப்பம்பட்டை 85 கிராம், விலாமிச்சம் வேர், மிளகு, வெள்ளுள்ளி, சீரகம்,
கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 17 கிராம், இவைகளைப் பசும்பால் 700 மி.லி. அளவில்
அரைத்து, நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்து தைலம் செய்து தலை முழுகிவர வளி
நோய்கள், தலைநோய் முதலியன நீங்கும்article 1265517 02FCE71E000005DC

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button