சைவம்

காராமணி சாதம்

தேவையான பொருட்கள்:

சாதம் – ஒன்றரை கப் (உதிரியாக வடித்தது),
காராமணி – அரை கப்,
வெங்காயம், தக்காளி – தலா 1,
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது,
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• காராமணியை ஊறவைத்து குக்கரில் வேக விட்டு, வடிக்கட்டி ஆறவிடவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

• அதில், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்கயிதும் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வேகவைத்த காராமணி, உப்பு, எலுமிச்சை சாறு, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.

• வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு மசாலா நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும்.

• பிறகு மூடி 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்15a0b672 6f46 4ee3 b381 40fa9756f351 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button