சிற்றுண்டி வகைகள்

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள் :

கொத்தவரங்காய் – கால்கிலோ,
து.பருப்பு – 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – இரண்டு,
பூண்டு – இரண்டு பல்,
இஞ்சி – சிறிய துண்டு
கடுகு, உ,பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தாளிக்க.

செய்முறை :

• கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• து.பருப்பை கால் மணி நேரம் ஊறவைக்கவும். பின், இத்துடன், மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதை இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.

• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உ.பருப்பு, தாளித்து கொத்தவரங்காயை சேர்த்து சமையல் சோடா போட்டு நன்கு வதக்கவும்.

• பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு டீஸ்பூன் தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு மூடிவைத்து விடவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து வேகவைத்து உதிர்த்த து.பருப்பையும் கொட்டிக் கிளறி இறக்கவும்.

குறிப்பு; கொத்தவரங்காயை இந்த கலவையில் சாப்பிட்டால் வாயு சேராது. சீக்கிரம் செரித்துவிடும். சமையல் சோடா சேர்த்திருப்பதால் கொத்தவரங்காய் நிறம் மாறாது.badedf02 078a 4252 92b4 6ddc7a314a1c S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button