சின்னதம்பி படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கங்களில் படத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
சின்னதம்பி திரைப்படம் ஏப்ரல் 12, 1991 இல் வெளியானது. பிரபு, குஷ்பு, மனேரமா, ராதாரவி, குண்டாமணி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சின்னதம்பி, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், படத்தில் பிரபு குசுப்புடனான அவர்களின் கெமிஸ்ட்ரி பற்றி அதிகம் கூறப்பட்டது. சின்னதம்பி படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனதைத் தொடும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னதம்பி தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிவிட்டன என்பதை நம்புவது கடினம். என் மீது பொழிந்த அன்பிற்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், பி.வாசு மற்றும் பிரபு மீது நான் எப்போதும் பிரமிப்புடன் இருக்கிறேன். இளையராஜா அவர்களின் ஆன்மாவைத் தூண்டும் இசையை என்றும் மறக்க முடியாது. இந்த படத்தை தயாரித்த மறைந்த தயாரிப்பாளர் பாலுக்கு நன்றி.
சின்னதம்பியில் என் நந்தினி கதாபாத்திரம் எல்லோர் மனதிலும் என்றும் பதிந்துவிட்டது. குசுப்பின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Just can’t believe it’s been 32 yrs since #ChinnaThambi took tamil cinema by storm. Will always be indebted for the love showered upon me. My heart will always beat for #PVasu Sir & #Prabhu Sir. Forever grateful to #Illaiyaraja Sir for his soul stirring music n Late #KBalu for… pic.twitter.com/EDxxKwnDaN
— KhushbuSundar (@khushsundar) April 12, 2023