aa239
Other News

மச்சான் உங்க தங்கச்சிய கொலை பண்ணிட்டேன்.. கூலாக போன் போட்டு சொன்ன கணவன்!!

இந்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ரமேஷ் பெனிவால், 35 வயது, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், மடக்கா டானில் வசிக்கிறார்.

இவருக்கும் சுமன் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு குழந்தைகளும் பள்ளியில் படிக்கின்றனர்.

 

ரமேஷ் பெனிவால் மர வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரமேஷ் பெனிவால் தனது மனைவியை தலையில் கல்லால் அடித்துக் கொன்றார்.

அதன்பின், இரவு முழுவதும் மனைவியின் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த ரமேஷ் பெனிவால், தனது மைத்துனருக்கு போன் செய்து, அதிகாலை 2 மணியளவில் மனைவியைக் கொன்றதாகக் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உறவினர்களுடன் சகோதரி வீட்டிற்கு சென்றார். ஆனால் ரமேஷ் பெனிவால் கதவை திறக்க மறுத்துவிட்டார். தகவல் அறிந்த வீட்டின் உரிமையாளர் விரைந்து வந்து போலீசாரை அழைத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷை எச்சரித்ததையடுத்து, அவர் கதவை திறந்தார்.

 

கொலையை உறுதி செய்த போலீசார், ரமேஷை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ரமேஷ் பெனிவால் இரவு தாமதமாக வீடு திரும்பியதால், அவருக்கு உணவு தர மனைவி சுமன் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டு ரமேஷ் பெனிவால் தனது மனைவியைக் கல்லால் அடித்துக் கொன்றார். கொல்லப்பட்ட சுமன், ராஷ்டிரிய லோகந்த்ரிக் கட்சியின் (ஆர்எல்பி) மஹிரா மோர்ச்சாவின் முன்னாள் தலைவர் ஆவார்.

Related posts

எந்த ராசிக்காரர்களுக்கு அழகான வாழ்க்கைத் துணை கிடைக்கும் ..?ஜோதிடம் சார்ந்த கணிப்பு

nathan

Whoa! Ava Phillippe Looks More Like Mom Reese Than Ever With New Lob

nathan

“ஏன் இன்னும் குழந்தை இல்லை..” – அனிதா சம்பத்

nathan

இந்த ஆண்டில் திருமணம் இந்த ராசியினருக்கு தான்…

nathan

10 இளம் பெண்களை திருமணம் செய்த இளைஞர்…!

nathan

சூரிய கிரகணத்தை 54 வருடங்களுக்கு முன் துல்லியமாக கணித்த நாளிதழ் பத்திரிக்கை…

nathan

அண்ணியுடன் ரெயில் ஏறி ஓட்டம் பிடித்த கொழுந்தன்…!கள்ளக்காதல் மோகம்

nathan

விடுதலை பட நாயகியின் புகைப்படங்கள்

nathan

இன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா?

nathan