கோவை காந்திமா நகரைச் சேர்ந்தவர்கள் பீனா ப்ரீத்தி-பிரலோப் தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தங்களது 3 வயது மகளுக்கு ஜாதி, மதம் சாராத சான்றிதழ் பெற விரும்பிய தம்பதியினர் இது தொடர்பாக வடகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றனர்.
இதுகுறித்து தம்பதியர் கூறுகையில், ‘‘இந்தியர்கள் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் இருந்தால் போதும். எங்கள் மகள்களை சாதி, மத அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். இந்தச் சான்றிதழைப் பெறுவதன் மூலம் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தப் பலனும் இனி எனது குழந்தைக்கு கிடைக்காது என்பதை அறிந்து விண்ணப்பிக்கிறேன்.
விண்ணப்பித்தல் மற்றும் சான்றிதழ்கள் பெறுவதில் சில காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஏன் இப்படி வாங்கறீங்கன்னு நிறைய பேர் கேட்டாங்க. எனவே, சிலர் தங்கள் குழந்தைக்கு சான்றிதழ் வாங்க விரும்புகிறார்கள், ஆனால் அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, இதுகுறித்து பள்ளிகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் முன் அனைத்து மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், “மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, மதமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ விரும்பினால், சம்மந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.