நடிகை விஜயலட்சுமியின் வேண்டுகோளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சீமான் திருமணத்திற்கு பிறகு தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
அப்போது விஜயலக்ஷ்மி சீமானை நம்பி இந்த இடத்தில் நிற்பதாகவும், அவரை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜயலக்ஷ்மி புகார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ”அமைதியாக கடந்து போகவேண்டும் என்று நினைக்கிறேன் என்றும், எனக்கு பல கோடிக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது, மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் இதை பற்றி பேசுவது கேவலமாக இருக்கிறது” என சீமான் தெரிவித்தார்.