முக அழகைப் பேணுவது அவசியம் !
முகத்தில் ஏற்படும் கருப்பைப் போக்க எலுமிச்சம் பழம் உதவும். ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள். அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள்.
5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.
முகப்பரு அகல நாட்டு மருந்து கடையில் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.
குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க பயத்தம்பருப்பு மாவைத் தேய்த்து குளிக்கலாம்.