மருத்துவ குறிப்பு
நசுக்கிய ஏலக்காயை நீரில் கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் . .
சமைக்கும்போது நம் வீட்டுப் பெண்கள், வாசனைக்காக உணவில் சேர்க்கும் ஒரு பொருள் இதனை மூலிகை என்றும்சொல்லலாம். அந்த வாசனைக்காக போடப்படும் ஏலக்காய்களை ஐந்தாறு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக நசுக்கி, அரை குவளை குடிநீரில் போட்டு, அதை நன்றாக கஷாயமாகக் காய்ச்சிய பிறகு, அதில் சிறிதளவு பனை வெல்லத்தை போட்டு கலக்கி குடித்தால் வெயிலில் அதிகம் அலைந்ததனால் உண்டான தலை சுற்றல் உடன் நிற்கும். மேலும். மயக்கமும் மாயமாய் மறைந்து போகும் .