தலைமுடி சிகிச்சை

முடி கருப்பாக வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய் – இயற்கை மருத்துவம்

தேவையான பொருட்கள்:
* செம்பருத்தி பூ – 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ)
* செம்பருத்தி இலை – 3 முதல் 5 இலைகள்
* தேங்காய் எண்ணெய் – 1 கப்
* துளசி – 5 இலைகள்
* வெந்தயம் – சிறிதளவு

செய்முறை:-
1. செம்பருத்தி பூ மற்றும் இலைகளை ச்ச்சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயேஅடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
3. பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
12932768 1115480778472653 2559085167858339022 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button