Other News

விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கிய இந்தியர்… அவரது மொத்த சொத்து மதிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா சமீபத்தில் உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கியுள்ளனர்.

அவர்கள் தங்கள் மகள்கள் வசுந்திரா மற்றும் ரித்தியின் நினைவாக அந்த மாளிகைக்கு வள்ளி என்று பெயரிட்டனர். இந்த மாளிகை முன்பு கிரேக்க பில்லியனர் கிறிஸ்டினா ஓனாசிஸ் என்பவருக்கு சொந்தமானது.

 

திரு. பங்கஜ் ஓஸ்வால் இந்த மாளிகையை சொந்தமாக்க இந்திய மதிப்பில் சுமார் 1,649 மில்லியன் செலவிட்டுள்ளார். இது உலகின் மிக விலையுயர்ந்த முதல் 10 வீடுகளில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மாளிகை சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில் உள்ள ஜீன் ஜீன் கிராமத்தில் 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாளிகையின் உட்புறம் ஜெஃப்ரி வில்க்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.

24 65d1072124c39

இந்தியாவின் முதன்மை தொழிலதிபர்களில் ஒருவரான அபய் குமார் ஓஸ்வால் என்பவரின் மகன் தான் இந்த பங்கஜ் ஓஸ்வால். ஓஸ்வால் குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ 247,000 கோடி என்றே கூறப்படுகிறது.

பர்ரப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிறுவனராக பங்கஜ் ஓஸ்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button