சிற்றுண்டி வகைகள்

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி

அப்பளத்தில் செய்யப்படும் இந்த ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

மசாலா அப்பளம் – 10,
உருளைக்கிழங்கு (பெரியது) – ஒன்று,
துருவிய பன்னீர் – 50 கிராம்,
கரம்மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை,
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு,
பச்சை மிளகாய் விழுது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவிக்கொள்ளவும்.

* அத்துடன் உப்பு, துருவிய பன்னீர், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

* ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து சுத்தமான துணியால் ஒற்றியெடுக்கவும்.

* உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து அப்பளத்தின் ஒரு பக்கம் வைத்து மெதுவாக உருட்டி தண்ணீரை தொட்டு ஓரங்களை அழுத்தி ஒட்டவும். இதே போல் எல்லா அப்பளங்களையும் செய்யவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய அப்பளங்களை ஒவ்வொன்றாக அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

* சுவையான ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் ரெடி.201605071411592474 how to make Masala Papad Stuffed Roll SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button