ஆரோக்கியம்

குழந்தைகளின் உணவு முறையில் கவனம் செலுத்துகின்றீர்களா?

mom n babyஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்­போது தனக்குக் குழந்தை பிறக்­கு­மென்று அவளின் முதல் எதிர்­பார்ப்புத் தொடங்கி விடும். வைத்­தி­யர்­களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்­போது அவ­ளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறு­வார்கள். இவ்­வாறு ஆர்­வத்­துடன் இருக்கும் ஒரு தாய் தன்­னு­டைய உடல் நலத்­திலும் குழந்­தையின் உடல் நலத்­திலும் மிகவும் கவனம் செலுத்­து­வது அவ­சியம்.

அந்த வகையில் கடந்த காலங்­களில் போசாக்­கற்ற தாய்­மார்­களும் குழந்­தை­களும் ஆரோக்­கி­யத்தில் மிகவும் மந்த நிலை­யி­லேயே உள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் கடந்த 17ஆம் திகதி சுகா­தார அமைச்சின் ஏற்­பாட்டில் கருத்­த­ரங்­கொன்று இடம்­பெற்­றது. இதன்­போது இலங்­கையை பொறுத்­த­மட்டில் 2007–2013 ஆண்டு காலப் பகு­தி­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வு­களின் பிர­காரம் ஏனைய உலக நாடு­க­ளையும் விட இலங்கை ஓர் ஆரோக்­கி­ய­மான நிலையில் காணப்­ப­டு­வ­தாக கருத்து தெரி­வித்­தி­ருந்­தது. அத­ன­டிப்­ப­டையில்,

சுகா­தார அமைச்சு கர்ப்­பிணி தாய்­மார்­க­ளுக்கும் அவர்­களின் குழந்­தை­க­ளுக்கும் பய­ன­ளிக்கும் வகையில் நல்ல பல கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தது.

ஒரு தாயாகப் போகும் பெண்­ணுக்கும் மற்றும் அவரின் கர்ப்­பப்­பையில் இருக்கும் குழந்­தைக்கும் பல பொருட்கள் தீங்கு விளை­விக்­கலாம். அதனால் கர்ப்­பி­ணிகள் சரும பரா­ம­ரிப்பு பற்றி மிகவும் கவ­ன­மாக இருக்க வேண்டும்.

இந்த சரும பரா­ம­ரிப்பு பற்­றிய தீர்­வு­க­ளினால் கர்ப்­பத்தை பாதிக்கும் கார­ணி­களை அறிந்துக் கொள்­ளவும் சரி­யான சரும பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பு­களை தேர்ந்­தெ­டுக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். கர்ப்­பிணிப் பெண்கள் ஹோர்­மோன்­களின் ஏற்ற இறக்­கங்கள் கார­ண­மாக சரு­மத்தின் உணர்­திறன் அதி­க­மா­வ­தற்கு ஆளா­வார்கள். இதன் விளை­வாக அவர்­க­ளது சருமம் கருமை அடைதல் மற்றும் நிற­மூட்­ட­லா­கி­றது.

கர்ப்­பிணி பெண்கள் அவர்­க­ளுக்கும் மற்றும் கரு­வி­லுள்ள குழந்­தையின் உடல்­நி­லைக்கு துன்பம் விளை­விக்க கார­ண­மாக இருக்கும் ஒவ்­வாமை பொருட்­க­ளி­லி­ருந்து கட்­டாயம் விலகி இருக்க வேண்டும்.

எப்­போதும் பயன்­ப­டுத்தும் பொருட்கள் பாது­காப்­பான பொருட்­க­ளாக உள்­ள­னவா என்றும் மற்றும் அது குழந்­தைக்கு எந்த எதிர்­வி­னையும் உண்­டாக்­காது என்­ப­தையும் உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

பொது­வாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்­புள்ள உணவை உட்­கொள்­பவர் கர்ப்­பிணி தாய்­மா­ராக இருக்கும் பட்­சத்தில் கூடு­த­லாக 300 கலோரி சத்­துள்ள உணவு எடுத்துக் கொள்­வது அவ­சியம். அதா­வது, சரா­ச­ரி­யாக சாப்­பிடும் உண­வோடு வயிற்­றி­லி­ருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடு­த­லாகச் சாப்­பிட வேண்டும். காலை உண­வாக இட்லி, தோசை, சப்­பாத்தி அல்­லது அதற்கு இணை­யான சத்து தரும் ஓட்ஸ் அல்­லது சம்பா, கோதுமை, உப்­புமா என்று ஏதா­வது ஒரு உணவை அள­வோடு சாப்­பி­டலாம். மதிய உண­வுக்கு சோற்­றுடன் காய்­கறி ஏதேனும் ஒரு கீரை எடுத்துக் கொள்­ளலாம். அசைவம் சாப்­பி­டு­ப­வர்கள் என்றால் முட்­டையின் வெள்­ளைக்­கரு, மீன் போன்ற சத்­தான அசைவ உண­வொன்றை சேர்த்­துக்­கொள்­ளலாம். காலையில் எடுத்துக் கொண்ட அதே மாதி­ரி­யான அதே அள­வி­லான உண­வையே இர­வைக்கும் எடுத்­துக்­கொள்­ளலாம் என வைத்­திய நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஒரு தாய் தன் போசாக்கு மட்­டத்­தினை பார்த்துக் கொள்­வ­துடன் தனது குழந்­தையின் வளர்ச்­சி­யிலும் கவனம் செலுத்­து­வது அவ­சியம். பிறந்த குழந்­தையின் நாக்கில் முதன் முதலாக தேன், சர்க்­கரை, பால் போன்­ற­வற்றைத் தடவும் பழக்கம் உள்­ளது. நாள்­பட்ட தேனாக இருந்தால் அதி­லி­ருக்கும் ஒரு வகை நச்சுக் கிருமி இளம் பிள்­ளை­வா­தத்­தைக்­கூட கொண்­டு­வ­ரக்­கூடும். எனவே அவ்­வா­றான விட­யங்­களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்­தைக்கு தாய்ப்பால் ஊட்டும் போது மிகவும் அவ­தா­னத்­து­டனும் அன்­பு­டனும் கொடுக்க வேண்டும் மாறாக கோபத்தின் உச்­சத்தில் இருக்கும் ஒரு தாய் தன் குழந்­தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்­சி­யினால் ஏற்­படும் கெடு­தல்கள் அந்த பாலையே நஞ்­சாக்கி குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்­ப­டுத்தும். எனவே தாய்­மார்கள் பாலூட்டும் போது அமை­தி­யான சூழ்­நி­லையில் தாய்ப்­பா­லூட்ட வேண்டும் என்­கின்­றனர் மருத்­து­வர்கள்.

தாய்ப்­பாலைச் சேமித்துக் கொடுப்­பது நல்­ல­தல்ல. தவிர்க்­க­மு­டி­யாத பட்­சத்தில் சுத்­த­மான பாத்­தி­ரத்தில் சேக­ரித்துக் கொடுக்­கலாம். சாதா­ரண அறை வெப்­பத்தில் 6மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். தயிர் சாப்­பிட்டால் குழந்­தை­க­ளுக்குச் சளி பிடிக்கும் என்­பது தவறு. குழந்­தைக்கு தயிர் மிகவும் நல்ல உணவு. தயி­ரில் ­புரொ­ப­யோட்டிக் எனும் சத்து அதிகம். அது குட­லுக்கு மிக நல்­லது. குழந்­தைக்கு சரும மற்றும் உண­வு­களில் ஏற்­படும் அலர்ஜி வராமல் தடுக்கும்.

-4 மாதம் வரை­யான குழந்­தை­க­ளுக்கு தாய்ப்­பாலே சிறந்­தது. மேலும் இக்­கா­லப்­ப­கு­தி­களில் தாய் பால் மட்­டுமே குழந்­தை­க­ளுக்கு பருக்­க­வேண்டும். நிறைய ஆய்­வுகள் கூறும் ஒரு விடயம் தான் குழந்தை பிறந்த பின்னர் அவர்­க­ளுக்கு தாய்ப்­பா­லி­லேயே வேண்­டிய அனைத்து சத்­துக்­களும் கிடைத்து விடும். ஏனெனில் தாய்ப்­பாலில் அள­வுக்கு அதி­க­மான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்­துள்­ளது. மேலும் அந்த தாய்ப்பால் அவர்­களின் உட­லி­லுள்ள கழி­வு­களை வெளி­யேற்­று­வ­தோடு பிறந்த குழந்­தைக்கு மஞ்சட்காமா­லையை ஏற்­ப­டுத்தும் பிலி­ரூபின் என்னும் நிற­மியை வெளி­யேற்­றி­விடும். அதிலும் தாய்ப்­பாலை குறைந்­தது நான்கு மாதங்­க­ளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்­க­ளது உறுப்­புகள் அனைத்தும் வலு­வ­டை­வ­தோடு செரி­மான மண்­ட­லமும் நன்கு செயற்­பட ஆரம்­பிக்கும் என அறி­வித்­துள்­ள­தாக வைத்­திய நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

மேலும் 4–6 மாதத்­திற்கு படிப்­ப­டி­யாக வளரும் ஒரு குழந்­தைக்கு வேறு உணவை சாப்­பி­டு­வதில் கவ­னத்தை செலுத்­து­வது போன்று தெரிந்தால் அப்­போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த உரு­ளைக்­கி­ழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்­பழம், பீச் பழம் போன்­ற­வற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். வாழைப்­ப­ழத்தில் இருக்கும் பொட்­டா­சியம் குழந்­தை­களின் மூளைத் திறனைத் தூண்­டு­கி­றது. இது மலச்­சிக்­கலைப் போக்கும். வாழைப்­பழம் சாப்­பிட்டால் சளி பிடிக்கும் என்­பதும் தவறு. மேலும் கடலை, பயறு, ஓட்ஸ், பார்லி என அழைக்­கப்­படும் வாட்­கோ­துமை போன்ற சத்­தான உண­வு­க­ளையும் சாப்­பிட கொடுக்­கலாம். அதிலும் இவர்­க­ளது ஆர்­வத்தை எவ்­வாறு தெரிந்து கொள்­வ­தென்றால் ஒரு நாளைக்கு 8—10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால் அப்­போது இந்த உண­வு­க­ளையும் தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்­திற்குப் பின் கொடுக்­கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

பின்னர் மெது­வாக வேக வைத்து மசித்த­ சோறு, காய்­க­றிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்­தையும் கொடுக்­கலாம். அதிலும் அவ்­வாறு கொடுக்கும் போது அவர்­க­ளுக்கு தாய்ப்பால் கொடுப்­பதும் அவ­சியம் என்­கின்­றனர் மருத்­து­வர்கள். குழந்­தை­க­ளுக்கு அந்த உண­வு­களால் ஏதா­வது அலர்ஜி போன்று வரு­கி­றதா என்று அவ்­வப்­போது கவ­ன­மாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்­வாறு வந்தால் உடனே அந்த உண­வு­களில் எவற்றால் ஆகி­றது என்று மருத்­து­வ­ரிடம் சென்று ஆலோ­சித்து அவற்றை தவிர மற்­ற­வற்றை கொடுக்­கலாம்.

தொடர்ந்து எட்டு மாதங்­களை கடக்கும் குழந்­தை­க­ளுக்கு சீஸ், தயிர் மற்றும் இரும்­புச்­சத்­துள்ள தானி­யங்­க­ளான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்­ற­வற்றை மெது­வாக கொடுக்க ஆரம்­பிக்­கலாம். அத்­துடன் 1/4 கப் புரோட்டீன் உண­வு­க­ளான முட்டை, மீன் போன்­ற­வற்­றையும் கொடுக்க ஆரம்­பிக்­கலாம்.ஒரு­வ­ரு­ட­கா­லத்தின் பின் அனைத்து உண­வு­க­ளையும் கொடுக்­கலாம். ஆனால் அது அள­வாக இருக்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் கவ­னிக்க வேண்­டி­யவை என பார்க்கும் போது சமைத்த உணவை 1½ மணி நேரத்­தி­லி­ருந்து 4 மணி நேரத்­துக்குள் சாப்­பிட கொடுக்க வேண்டும். இல்­லை­யெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்­மையை உரு­வாக்கும். இதனால் குழந்­தை­களின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்­பு­ணர்வு பாதிக்­கப்­படும். 8–9 வயதை அடைந்­த­வுடன் குழந்­தை­களை அதி­கா­லையில் எழுப்­புங்கள்.

அசைவ உணவு கொடுப்­பதை கூடி­ய­மட்டும் தவி­ருங்கள். எப்­போதும் புதி­தாக தயா­ரிக்­கப்­பட்ட உண­வு­க­ளையே குழந்­தை­க­ளுக்கு கொடுங்கள். வெள்ளைப் பூச­ணியின் சாறெ­டுத்து தேன் கலந்து தினமும் கொடுப்பது வளரும் குழந்­தை­க­ளுக்கு மிகச் சிறந்த ஊட்­டச்­சத்து உண­வாக இருக்கும். இதன் மூலம் அவர்­க­ளது கற்கும் திறனும் வளர்ச்­சியும் மேம்­படும். ஆஸ்­துமா போன்­ற­வற்றால் பாதிக்­கப்­பட்­டுள்ள குழந்­தை­க­ளுக்கு வெள்ளை பூசணியை தவிர்த்து விடலாம். குளிர்­பா­னங்கள், செயற்கை சுவை­யூட்­டிகள் மற்றும் நிற­மூட்­டிகள் கொண்ட மசாலா அடங்­கிய உண­வு­களை கடை­களில் வாங்கி குழந்­தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் தம்­மு­டைய கருத்­துக்­களை அவர்கள் மேல் திணிப்­பதை விட்­டு­விட்டு குழந்தை தனது திறனை தானே கண்­ட­றிய ஊக்­கு­விக்க வேண்டும்.

குழந்­தைகள் பரு­ம­னாக இருக்க வேண்டும் என்று அள­வுக்கு அதி­க­மாக உணவை கொடுத்­து­ உடல் எடையை அதி­க­ரிக்கச் செய்­வது மிகவும் தவ­றான விட­ய­மாகும். 60வயதில் வர வேண்­டிய பி.பி.சுகர் போன்­றவை 30வய­தி­லேயே அவர்­களை தேடி வந்துவிடும். ஒரு­வ­கையில் அவர்கள் பெரி­யவர்களா­னதும் இவ்­வா­றான நோய்கள் தாக்­கு­வ­தற்கு பெற்­றோரே கார­ண­வா­ளி­க­ளா­கின்­றனர்.

சமூ­கத்­தி­னரி­டையே தங்­க­ளு­டைய குழந்தை மிகவும் அழ­கா­கவும், கவர்ச்­சி­யான தோற்றம் கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­ட­வேண்­டு­மெ­னவே அநே­க­மான பெற்­றோர்கள் கரு­து­கின்­றனர்.

இதனால் அவர்கள் கையாளும் உணவு முறைகள் அவர்­களின் வாழ்க்­கை­யையே சூன்­ய­மாக்­கி­விடும் என்­பதில் எவ்­வித ஐயமும் இல்லை. குழந்­தை­களை சீரான உடல்­வா­குடன் வளர்க்கப் பார்க்க வேண்­டு­மென வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button