ஆரோக்கிய உணவு

வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்

பசியை தூண்டுற சக்தி பிரண்டை செடிக்கு உண்டு. வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி ஏப்பம் விடுவது, இந்த தொல்லையெல்லாம் பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டால் பறந்து போயிடும்.

வயிற்று தொல்லைகளை போக்கும் பிரண்டை துவையல்
தேவையான பொருட்கள் :

251570F9 8D2E 4CAF A3EF 502A8B15F322 L styvpf

பிரண்டை – ஒரு கட்டு
மிளகாய் வற்றல் – 5
புளி – சிறிதளவு
தேங்காய் – 1 பத்தை
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – சுவைக்கு
எண்ணெய் – 2 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு.

செய்முறை :

* பிரண்டையின் நரம்புகளை எடுத்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

974A3B08 E571 4593 912D 00B0C9041E37 L styvpf

* தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு பிரண்டையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் மிளகாய் வற்றல், புளி, உளுத்தம் பருப்பு, தேங்காய், அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

* வதக்கிய அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு தேவையான உப்பு, பெருங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை உளுந்து போட்டு தாளித்து அரைத்த பிரண்டை துவையலில் கொட்டி பரிமாறவும்.

* சத்தான பிரண்டை துவையல் ரெடி.

பி.கு:- பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்து விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button