அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ரொசாசியாவிற்கான 10 சிறந்த தோல் பராமரிப்பு குறிப்புகள்

Rosaceaரொசாசியா மிகவும் பொதுவான ஒன்று, இன்றளவும் மக்கள் இதை தோல் நோய் என்று மிகவும் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் உலகம் முழுவதும் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் இவர்களில் பலருக்கு இதை பற்றி முழுமையாக தெரியாது! பெரும்பான்மையான‌ மக்களுக்கு இது இருப்பது அவர்களுடைய‌ அறியாமையினால்தான்! இது பற்றி எல்லோருக்கும் தெரியாமல் உங்களால் எப்படி இதற்கு சிகிச்சையளிக்க முடியும்?

ரொசாசியாவிற்கான அறிகுறிகள், மூக்கு, கன்னங்கள், கன்னம், மற்றும் நெற்றியில் முக தோல் மீது, சிவத்தல் மற்றும் புள்ளிகள் சிவந்துபோதல் என வகைப்படுத்தப்படும். சில மக்கள் அவர்களின் முக்கியமான தோல் சிறப்பினை அவ்வப்போது கவனித்துக் கொள்ள வேண்டும். ரோசாசியா ஏற்பட்டால் முதலில் எரிச்சல் ஏற்படும். மேலும் கண் வறட்சி, சூரிய ஒளி உணர்திறன் போன்ற கண் சம்பந்தமான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். இதில் எளிதாக தோல் எரிச்சலை தூண்டும் காரணிகள் இருப்பதால் இது தவிர்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இது இருக்கும் போது லோஷன் மற்றும் ஒப்பனை பொருட்கள் பயன்படுத்தினால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் சரியான சிகிச்சையை பயன்படுத்தி ஒரு பெரிய அளவிற்கு இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

ரொசாசியாவிற்கான டாப் 10 தோல் பராமரிப்பு குறிப்புகள்:
இங்கே ரொசாசியாவிற்கான டாப் 10 தோல் பராமரிப்பு குறிப்புகள் உள்ளன:

1. முதலில் தூண்டுதல் பற்றி அறிய வேண்டும்:
முதல் மற்றும் முக்கியமான படி உங்கள் தோல் மீது ரோசாசியா அதிகமாகி அதனால் ஏற்படும் தூண்டுதல்களை பற்றி அறிய முற்பட வேண்டும். ரோசாசியா உறுத்தல்களை களைவதற்கு சில பொதுவான மது, பச்சை கற்பூரம், சூனிய வகை காட்டு செடி, கற்பூரம், மிளகுக்கீரை மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளன. ஒவ்வொரு நோயாளிகளுக்கும் சில பொதுவான உறுத்தல்களின் உணர்திறன் வெவ்வேறு அளவில் உள்ளது. அது உங்கள் தோல் எரிச்சல் மற்றும் உங்கள் தோல் மீது ரோசாசியா வெளிவருவதில் இருந்து என்ன பங்கு என்பதை புரிந்து கொள்ள முக்கியமானதாக உள்ளது. ரோசாசியாவை கட்டுப்படுத்த சிறந்த வழி இந்த இலவச தூண்டல்களை கட்டுப்படுத்தும் மற்றும் சில‌ தோல் பராமரிப்பு பொருட்களும் பயன்படுத்தலாம். எப்பொழுதும் ஒரு புதிய தயாரிப்பை முயற்சிக்கும் போது முதலில் ஒரு பகுதியில் சோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அப்படி பயன்படுத்தும் போது, சிவத்தல் மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது என்றால், அதை பயன்படுத்த வேண்டாம்.

2. ஸ்கரப் மற்றும் எக்ஸ்ப்ளாய்டர்ஸ் பயன்படுத்துவதை தவிருங்கள்:
எப்பொழுதும் ஸ்கரப் மற்றும் எக்ஸ்ப்ளாய்டர்ஸ் சருமத்தை சிவக்க வைக்கும் ஆனால் இதுவே தோலின் தன்மையை சீக்கிரம் உலர செய்து விடும்.

3. மாய்ஸரைஷேசன் தோலினை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்து இருக்கும் முக்கிய காரணியாக உள்ளது:
மாய்ஸரைஷேசன் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான‌ தோலை எப்பொழுதும் வைத்து இருக்கும் என்று நன்கு அறியப்பட்ட உண்மை. இதேதான் ரோசாசியாவிற்கும் பொருந்துகிறது. எரிச்சல் மிக்க தோலிற்கு அடிக்கடி மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது கட்டாயமாகும். தோல் வறட்சியை ஏற்படுத்தும் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். முக்கியமாக சென்சிடிவ் தோலை ஒரேமாதிரியாக வைக்க மிதமான் மற்றும் ஒரு நல்ல தரமான ஈரப்பதமுள்ள‌ மாய்ஸரைஷர் பயன்படுத்துவது நல்லது.

4. உங்கள் தோல் மென்மையாக‌ இருக்க:
க்ளென்சிங் செய்யும் போது உங்கள் முகத்தை அழுத்தி தேய்ப்பதை தவிர்க்கவும். இதை பயன்படுத்தும் போது நன்கு தேய்க்காமல் மசாஜ் செய்வது போல மிருதுவாக் தேய்ப்பது நல்லது. மேலும் உங்கள் முகம் கழுவும் போது கடற்பாசிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம். இதை பயன்படுத்தினால் தோலுக்கு எரிச்சலே ஏற்படும்.

5. லேசான/இலகுவான‌ தோல் பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்தவும்:
ரோசாசியா அறிகுறிகள் உங்கள் முகத்தில் தெரிவதற்கான அறிகுறிகள் இருந்தால், இதை க‌ட்டுப்படுத்துவதும், தோல் மீது அக்கறை காட்டுவதும் முக்கியமானதாக‌ ஆகிறது. நிலைமை மோசமாகிக்கொண்டே போவதை தவிர்ப்பதற்கும் நீங்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், இதற்கு நீங்கள் லேசான மற்றும் மென்மையான தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்களை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. கடுமையான இரசாயனம் உள்ள பொருட்களை பயன்படுத்துவதை கண்டிப்பாக‌ தவிர்க்கவும்.

6. சூடான நீரிலிருந்து விலகி இருங்கள்:
சுடு நீர் பயன்படுத்தினால் உங்கள் தோல் சீக்கிரம் வறட்சியடைந்து விடும். எனவே இதற்கு சிறந்த வழி எப்போதும் குளிப்பதற்கும், மற்றும் உங்கள் முகம் கழுவுவதற்கும் வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துவது நல்லது. இதனால் சருமம் வறட்சியில் இருந்து பாதுகாக்கப்படும்.

7. பல விதமான தயாரிப்புக்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும்:
உங்கள் தோலிற்கு ஒரு டஜன் வெவ்வேறு பொருட்கள் பயன்படுத்தி இருந்தாலும் பார்ப்பதற்கு ஒரு சில பொருட்கள் பயன்படுத்தியது போலவெ கருதுகின்றனர். உதாரணமாக, ஒவ்வொன்றாக‌ சன்ஸ்கிரீன் லோஷன், மாய்ஸரைஷர் மற்றும் ஒரு பவுண்டேஷன் பயன்படுத்துவதற்கு பதில், டின்டட் மாய்ஸரைஷர் SPF உள்ளதை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்.

8. கன்சீலர்:
ரொசாசியாவினால் கடுமையான உளவியல் தாக்கம் ஏற்படும். இந்த நோய் பாதிக்கப்பட்ட மக்கள் சுய நம்பிக்கை இல்லாதவர்களாகவும் மற்றும் உலகத்தை தைரியமாக‌ எதிர்கொள்ளவும் தயங்குகிறார்கள். நீங்கள் அவர்களுள் ஒன்றாக இருந்தால், கன்சீலர் பயன்படுத்த‌ அவர்களை அதிலிருந்து விடுபட‌ முயற்சி செய்யவும். கன்சீலர் பயன்படுத்துவதால் சிவத்தல் மற்றும் புள்ளிகள் மறைய செய்கிறது. மேலும் இது நாட்பட்ட‌ பிரச்சனை பகுதிகளையும் மறைத்துவிடுகிறது மற்றும் தோலிற்கும் ஒரு பொலிவை கொடுக்கிறது.

9. மிருதுவான சருமத்திற்கு சோற்றுக்கற்றாழை உபயோகப்படுத்துங்கள்:
கற்றாழை அழற்சியை நீக்கி ஈரப்பதம் குடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இது உலர்ந்த மற்றும் சென்சிடிவ் ச்ருமம் உள்ள ரோசாசியா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒன்று கடைகளில் இருந்து பெறப்படும் கற்றாழை ஜெல் பயன்படுத்தவும் அல்லது செடிகளில் இருந்து நேரடியாக கிடைக்கும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தவும். இந்த ஜெல்லை விண்ணப்பிக்கும் போது தோலில் உள்ள‌ சிவந்து போதல், வறட்சி மற்றும் முகப்பரு இவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. உங்கள் சருமத்தையும் பட்டு போல மிருதுவாகவும், அழகாகவும் வைக்கிறது.

10. சூரிய ஒளி தாவரங்களுக்கு நல்லதே தவிர உங்களுக்கு இல்லை:
சூரிய ஒளியில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். அப்படி நீங்கள் போக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், முன்னெச்சரிக்கையாக. குடை எடுத்துக் கொண்டு செல்லவும் அல்லது ஒரு துணி கொண்டு உங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு செல்லவும்.  வலுவான சூரிய ஒளியான‌து ரோசாசியா அறிகுறிகளை மோசமாக்கி விடும். என்வே எப்போதும் வெளியே செல்லும் முன் முகத்திற்கு நல்ல தரமான‌ ஒரு சன்ப்ளாக் லோஷன் பயன்படுத்தி விட்டு செல்லவும்.

ரோசாசியா என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று, ஆனால் இது அதிகமாக பாதிக்கப்பட்டவர்களை மேலும் மேலும் கஷ்டப்படுத்தும். எனவே இந்த எளிய குறிப்புகளை தவறாமல் அவ்வப்போது செய்து கொண்டு, ரோசாசியாவை பல‌ மைல்கள் தொலைவில் நீங்கள் வைத்து கொள்ள முடியும்!
உங்களுக்கு இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்டுகிறது. என‌வே இதை முயற்சி செய்து மற்றும் இதனுடைய பலன் என்ன என்பதை நீங்களே கண்டுபிடிக்கவும். கீழே உள்ள கருத்துக்கள் பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button