சைவம்

சுவையான புளியோதரை செய்வது எப்படி

கோவில் புளியோதரையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான புளியோதரை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

உதிராக வடித்து ஆற வைத்த சாதம் – 2 கப்
புளி – 100 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க :

காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது
வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்

வறுத்து பொடிக்க வேண்டியவை :

தனியா – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கடலைப்பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

செய்முறை :

* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.

* புளியை கெட்டியாக 1 கப் அளவுக்கு கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.

* புளி பச்சை வாசனை போய் திக்கான பதம் வந்து எண்ணெய் ஓரங்களில் பிரிய ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

* புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

* 1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

குறிப்பு :

* மீதமிருக்கும் பொடியை வறுவல் ,வத்தக் குழம்புக்கு பயன்படுத்தலாம்.How to make delicious puliyodharai

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button