சிற்றுண்டி வகைகள்

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். டயட்டில் இருப்பவர்கள் காலை வேளைகளில் அவித்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

சுவையான பச்சரிசி குழாப்புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – ஒரு கப்,
தேங்காய் துருவல் – அரை கப்,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
நெய் – சிறிதளவு,
முந்திரி – 8,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

* பச்சரிசி மாவை வெறும் வாணலியில் நன்கு வறுக்கவும்.

* தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

* வறுத்த பச்சரிசி மாவில் உப்பு கரைத்த நீர் தெளித்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.

* புட்டுக்குழாயில் கொஞ்சம் புட்டு மாவை அடைத்து, அதன் மேல் ஒரு அடுக்காக தேவையான அளவு தேங்காய் துருவல் கலவையை அடைத்து… மற்றொரு அடுக்காக மாவு வைத்து, பிறகு மீண்டும் தேங்காய் துருவல் கலவையை வைத்து அடைக்கவும்.

* இதை ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

* பிறகு, குழாயிலிருந்து புட்டு எடுத்து… நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

* இதற்கு தொட்டு கொள்ள கொண்டைகடலை குருமா சுவையாக இருக்கும்.How to make delicious kulai puttu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button