முகப் பராமரிப்பு

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை கீழே பார்க்கலாம்.

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்
கரும்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு அதிகம் இருக்கும். இம்மாதிரியான புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்துளைகளில் அழுக்குகளின் தேக்கம் அதிகம் இருப்பது தான். இந்த கரும்புள்ளிகளைப் போக்க சில நம்பத்தகுந்த வீட்டு வைத்தியங்களை கீழே பார்க்கலாம்.

* 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேன் கலந்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவி, சுத்தமான காட்டன் துணியால் துடைத்து எடுக்க கரும்புள்ளிகள் நீங்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சரிசம அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* கிரீன் டீ பொடி அல்லது இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.201610060741289124 home remedies for nose blackheads SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button