​பொதுவானவை

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது காராமணி – கேரட் சுண்டல் வைத்து படைக்கலாம். அசத்தலாக இருக்கும்.

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

karamani sundal

தேவையான பொருட்கள் :

காராமணி – 250 கிராம்
கேரட் – 2 (துருவிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன்

செய்முறை :

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காராமணியை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து, 1 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* இத்துடன் பாதியளவு கேரட் துருவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* இத்துடன் வேக வைத்த காராமணி சேர்த்து கலந்து, 5 நிமிடம் தீயைக் குறைத்து வைக்கவும்.

* இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி, மீதியுள்ள கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

* சுவையான சத்தான காராமணி – கேரட் சுண்டல் ரெடி.201610071250556289 Navratri Special cowpea carrots sundal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button