29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலமும், குங்குமப்பூவும்

கர்ப்பிணி பெண்களுக்கு சிறிது குங்குமப்பூவினை பாலில் சேர்த்து பருகச் செய்தால் குழந்தை நல்ல நிறமாக பிறக்கும் என்றதொரு நம்பிக்கை உண்டு. எந்த தாய்க்குதான் தன் குழந்தை நல்ல நிறத்தோடு பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால் அப்படி நடக்குமா? இதுவரை விஞ்ஞானபூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.
முன்னோர்களின் வழிகாட்டு தலாகவே இருந்துள்ளது.
பொதுவில் குங்குமப்பூ சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
அதிக அளவு குங்குமப்பூ கர்ப்ப காலத்தில் கூடாது.
சிட்டிகை அளவு கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ எடுத்துக் கொள்ளலாம்.
அதிக அளவு என்பது பிரசவ வலியினை அதாவது கர்ப்பப்பை சுருங்கி விரிவதனை உருவாக்கும். அது குறைப் பிரசவத்தில் முடியலாம்.
ஆனால் 2, 3 துண்டுகள் எடுத்துக் கொள்வதில் பிரச்சினை இருக்காது. இருப்பினும் இதனை மருத்துவர் ஆலோசனைபடியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2, 3 என்ற எண்ணிக்கை அளவில் 50 கிராம் சுடுபாலில் நன்கு இதனை ஊறவைத்து 20 நிமிடங்கள் சென்று இத்துடன் ஒரு கிளாஸ் பால் சேர்த்து சாப்பிட வேண்டும். அநேக இனிப்பு, சூப், சாதம் வகைகளிலும் குங்குமப்பூ சேர்க்கப்படுவதுண்டு.
அதனை அளவோடு சேர்ப்பதே நல்லது.
பிரசவ வலி ஏற்படும்பொழுது குங்குமப்பூ 10 கிராம் அளவு சோம்பு நீருடன் கலந்து கொடுத்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்பதனை வீட்டு வைத்தியமாக நடைமுறையில் வைத்துள்ளனர். கருப்பை சுருங்கி விரியும் தன்மை குங்குமப்பூவிற்கு உண்டு என்ற மருத்துவ குணத்தினை வைத்தே இது பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.Pregnant%20Lady(C)

Related posts

கர்ப்பகால சர்க்கரை நோய் ஆபத்தானதா?

nathan

கருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள்

nathan

தாய்மைக்குப் பிறகும் ஃபிட்டாகலாம்!

nathan

கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் மாத்திரை

nathan

கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு…

nathan

ஆண் குழந்தை ரகசியம்

nathan

நீங்கள் வேலைக்கு செல்லும் கர்ப்பிணியா இதோ உங்களுக்கான டிப்ஸ்?

nathan

குழந்தையின் வளர்ச்சி!

nathan

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika