சரும பராமரிப்பு

வசிகரமான முகத்தை பெற இதோ ஈஸியான சில டிப்ஸ்….!

* சந்தானம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நைசாக அரைத்து முகத்தில் பூசினால் கருப்பு திட்டு, மங்கு போன்றவை மறையும்.

* வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலத் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கருமை காணாமல் போகும்.

* முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

* சிறிது வெங்காயச்சாறு, ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு, ஆலிவ் ஆயில், பயத்தம் மாவு சிறிது கலந்து கழுத்தில், கீழிருந்து தாடை நோக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். நாளடைவில் கழுத்தில் உள்ள கருமை மறைந்து அழகான கழுத்தாக மாறிவிடும்.

* தர்பூசணிச் சாறி, பாசிபயரு மாவு கலைவை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் புதுப்பொலிவு கிடைக்கும்.

* பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசலாம். இது இயற்கையான ஸ்க்ரப்.
superface

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button