செட்டிநாட்டுச் சமையல்

சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு

சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த செட்டிநாடு மிளகு நண்டு குழம்பை செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சளி தொல்லைக்கு இதமான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு

chettinad milagu nandu kulambu

தேவையான பொருட்கள் :

நண்டு – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 25 கிராம்
தக்காளி – 4
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 5 பல்
புளி – சிறிதளவு
இஞ்சி – சிறிது
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
மிளகு – 3 ஸ்பூன்
தேங்காய் – 1 மூடி
நல்லெண்ணெய் – குழிக்கரண்டி அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க :

பட்டை – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு

செய்முறை :

* நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்.

* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

* தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

* பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும்.

* அடுத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.

* பச்சை வாசனை போனவுடன் இதில் அரைத்து தேங்காய் விழுது சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு ரெடி.201612191048140878 Chettinad pepper crab curry SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button