அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ஃபேஸ் மாஸ்க் போடும் போது கவனிக்க வேண்டியவை

bc98776f-6850-410f-9899-36e7d2ae012c_S_secvpf.gifமுகம் இளமை மாறாமல் இருக்க ஃபேஸ் மாஸ்க்குகளை உங்கள் சருமத்திற்க்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுக்கவும். பொதுவான குறிப்புகள் –

• மாஸ்க்குகளை உபயோகிக்கும் முன் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும்.

• மாஸ்க்கை முகத்தில் சரியாக ஒரே மாதிரி தடவி கொள்ள வேண்டும். உதடுகள், கண்கள் இவற்றை விட்டு விட வேண்டும்.

• மாஸ்க்கை குறைந்த பட்சம் அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். மாஸ்க்கை எடுக்க நிறைய தண்ணீரை உபயோகிக்கவும். கடைகளில் கிடைக்கும் மாஸ்க்குகள் உரித்து எடுக்கும் வகையை சேர்ந்தவை.

• களிமண் ஒரு சிறந்த மாஸ்க் ஆகும். ஏனென்றால் அது சருமத்தின் உள் இருக்கும் அழுக்கையும், மாசுகளையும் உறிஞ்சி விடும். தவிர களிமண்ணில் சருமத்திற்கு தேவையான தாது பொருட்கள் உள்ளன.

• மாஸ்க்குகள் சருமத்திலிருந்து அழுக்குகளை நீக்குகின்றன.

• மாஸ்க்குகள் உபயோகிக்கும் முன் நீராவியால் முகத்தை சுத்தம் செய்து கொள்வது நல்லது. இதனால் சரும துவாரங்கள் விரிந்து அழுக்குகள் வெளியேறும். நீராவிக்கு வெறும் தண்ணீர் மட்டும் உபயோகிக்காமல் மூலிகை கஷாயங்களை சேர்த்து கொண்டால் இன்னும் நல்லது.

• மாஸ்க் போட்டவர்கள் பேசக் கூடாது.

• சரும நோய் உள்ளவர்கள் மாஸ்க் உபயோகிக்க கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button