ஆரோக்கிய உணவு

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா

தினமும் ஒரே வகையான உப்புமாவை செய்து அலுத்துவிட்டதா? இப்போது கீரையை வைத்து சுவையான, சத்தான, கீரை உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா
தேவையான பொருட்கள்:

கீரை – 1 கட்டு
இட்லி அரிசி – 2 கப்
துவரம் பருப்பு – ¾ கப்
தேங்காய் – ஒரு கைப்பிடி
மிளகாய் வற்றல் – 4
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கடுகு, உளுந்து – 1 ஸ்பூன்
மோர் மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* இட்லி அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* கீரையை (சிறு கீரை, அரை கீரை, தண்டு கீரை, பாலக் கீரை, பொன்னாங்கன்னி கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.) நன்றாக சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

* இட்லி அரிசி, துவரம்பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று ரவை பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து கரைத்து, இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

* இட்லி ஆறியவுடன் அதை கையினால் உதிர்த்துக்கொள்ள வேண்டும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் மோர் மிளகாய் சேர்த்து, பிறகு உதிர்த்த கீரை இட்லியை போட்டு உதிரிவாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்.

* சத்தான கீரை உப்புமா தயார்.

* இது மிகவும் ஆரோக்கியமான, சத்தான சிற்றுண்டியாகும். இந்த கீரை உப்புமாவை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.201612260851090804 keerai rice upma SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button