ஆரோக்கிய உணவு

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!!!

தண்ணீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன நடக்கிறது என்று தெரியுமா? ஆராய்ச்சி ஒன்றில், ஜப்பானிய மக்கள் இந்த சிம்பிளான செயலை அன்றாடம் பின்பற்றி வருவதால் தான், அவர்களுக்கு எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தொற்றுவதில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த சிம்பிளான செயலை அன்றாடம் பின்பற்றுவதன் மூலம், எடையைக் கூட குறைக்கலாம். மேலும் ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல், ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைக்கலாம். இந்த வழியைப் பின்பற்றும் போது மேற்கொள்ள வேண்டியவைகள்:

* காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவி, பற்களை துலக்கும் முன் 1 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். * பற்களைத் துலக்கிய பின் 45 நிமிடங்கள் வரை எந்த ஒரு பானத்தையும் அல்லது உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. * தண்ணீர் குடித்து 45 நிமிடங்களுக்குப் பின் காலை உணவை உட்கொள்ள வேண்டும். * காலை உணவை உண்ட பின், 2 மணிநேரத்திற்கு எந்த ஒரு உணவுப்பொருளையும் அல்லது பானத்தையும் எடுக்கக்கூடாது.

காலை உணவிற்கு 2 மணிநேரத்திற்கு பின் எப்போதும் போன்று செயல்படலாம். இங்கு இப்படி தினமும் பின்பற்றி வந்தால், என்ன நன்மைகளை நாம் பெறலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தம் ஒருவர் தொடர்ந்து 30 நாட்கள் இந்த செயல்முறையை பின்பற்றுவதன் மூலம், அவரது இரத்த அழுத்தம் சீரான முறையில் இருப்பதை நன்கு காணலாம்.

வாய்வு பிரச்சனை 10 நாட்கள் இந்த செயல்முறையை பின்பற்றினால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், நீரில் உள்ள சத்துக்கள், வயிற்றுப் படலத்தில் உள்ள பிரச்சனையை சரிசெய்துவிடும்.

நீரிழிவு தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் இன்சுலின் அளவு சீராகிவிடும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

மலச்சிக்கல் மலச்சிக்கல் பிரச்சனையால் நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டு வந்தால், அதற்கு ஓர் முக்கிய காரணம் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். ஆகவே இந்த செயல்முறையை தினமும் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் பத்தே நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் தவிர்த்திடலாம்.

புற்றுநோய் சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆனால் உண்மையில் மேற்கூறிய செயல்முறையை அன்றாடம் பின்பற்றி வருவதன் மூலம், புற்றுநோய் 180 நாட்களில் முற்றிலும் குணமாகிவிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காசநோய் டிபி என்னும் காசநோய் இருப்பவர்கள், வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், 90 நாட்களில் காசநோய் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

சோர்வு காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதான் முலம், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

எடை குறையும் எடையைக் குறைக்க தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். அதிலும் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், உடல் எடை விரைவில் குறைவதை நன்கு காணலாம். முக்கியமாக தண்ணீர் அதிகம் குடித்தால், கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும்.

இதயத்திற்கு நல்லது தண்ணீர் இதய நோய்களைக் குணப்படுத்த உதவும். அதிலும் தண்ணீரை வெறும் வயிற்றில் அதிகாலையில் குடித்து வந்தால், இதயத்தில் இரத்த அழுத்தம் சீராக இருந்து, இதய நோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

டாக்ஸின்களை நீக்கும் காலை உணவிற்கு முன் குறைந்தது 1 அல்லது 2 டம்ளர் தண்ணீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். இதனால் சருமம் பொலிவோடு காணப்படும்.

உறுப்புகளுக்கு நல்லது காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடலின் மிக முக்கிய உறுப்புகள் ஈரப்பதமூட்டப்பட்டு, அவற்றின் இயக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்,.

சருமத்திற்கு நல்லது
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், கரும்புள்ளிகள், பருக்கள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் சுத்தமாகவும், பளிச்சென்றும், புத்துணர்ச்சியோடும் இருக்கும்.

11 1439269904 10hot water b

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button