அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகம் வசீகரமாக இருக்க…

ld622முகம் எப்போதும் பளபளப்பாக, வசீகரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இவைகளை கடைபிடியுங்கள்.

* புதினாவை, தயிரில் சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால், முகம் பளிச்சென மாறும்.

* முட்டையின் வெள்ளைக்கரு, வெள்ளை வெங்காயம், மருதாணி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசினால், முக வசீகரம் அதிகரிக்கும்.

* தக்காளியை நறுக்கி, முகத்தில் அடிக்கடி தேய்த்தால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும்.

* வெள்ளரிக்காயை சிப்ஸ் போல சீவி, கண்களுக்கு கீழே வைத்தால், கருவளையம் நீங்கும்.

* கோடை காலத்தில், மோரை துணியால் முக்கி, முகத்தில் தேயுங்கள். மினுமினுப்பு அதிகரிக்கும்.

* பாலில் எலுமிச்சை பழச்சாறை கலந்து, முகத்தை கழுவினால் நல்லது.

* ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் பூசுவதும், முகத்தை பொலிவாக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button