செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்

உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 200 கிராம்
பச்சை பட்டாணி – 1 கப்
பூண்டு – 5 பல்
வெங்காயம் – 2
தக்காளி – 1
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – ருசிக்கு
தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க :

எண்ணெய் – தேவைக்கு
கடுகு – 1/4 ஸ்பூன்
உ.பருப்பு – 1/2 ஸ்பூன்
சோம்பு – 1/4 ஸ்பூன் + 1/4 ஸ்பூன்

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* பூண்டு, இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சோம்பை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த இஞ்சி விழுதை போட்டு கிளறவும்.

* அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

* அனைத்து சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல் ரெடி.201702081524211526 Chettinad Potato Green peas fry SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button