சைவம்

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

மணத்தக்காளி வற்றலை வைத்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள் :

காயவைத்த மணத்தக்காளி வற்றல் – 25 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – ஒரு எலுமிச்சை அளவு,
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,
வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – சிறிதளவு.

செய்முறை :

* புளியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் மணத்தக்காளி வற்றலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து இதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

* குழம்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால். அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத்தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.201702081302223371 Manathakkali Vathal Kuzhambu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button