கைகளில் உள்ள கருமையை போக்க சில வழிகள்
கடலை மாவு
கடலை மாவு, தயிர் மற்றும் ர்லுமிச்சையை கொண்டு ஒரு பேஸ்ட்டை தயார் செய்யுங்கள். மூன்றின் அளவும் சரிசமமாக இருக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். பின் அதனை 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். இந்த கலவை காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.
மஞ்சள்
1 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை பாலில் கலந்து கொள்ளுங்கள். அதனை நன்றாக கலக்கி கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். தடவிய கலவை காயும் வரை, 10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
இளநிர்
கைகளில் இளநீரை தொடர்ச்சியாக தடவி, பின் காய வையுங்கள். வேகமான மற்றும் சிறந்த பலனை பெறுவதற்கு, இந்த சொல்யூஷனை தினமும் ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்தலாம்.
பப்பாளி
சரும பதனிடுதலை நீக்க உதவும் மற்றொரு பொருள் பப்பாளி. பப்பாளியை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து, அதை அப்படியே 10 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
முல்தானி
மட்டி வெண் பூசணி மற்றும் முல்தானி மட்டி கொண்ட கலவையை தயார் செய்து, அதனை பாத்க்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். பின் குளிர்ந்த நீரில் கையை அலசுங்கள்.