சிற்றுண்டி வகைகள்

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சாமை காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

சாமை அரிசி மாவு – 500 கிராம்,
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி,
கடுகு – சிறிதளவு,
உளுந்து – ஒரு தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி,
சீரகம் – ஒரு தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
தக்காளி – 1,
சின்ன வெங்காயம் – 250 கிராம்,
காய்ந்த மிளகாய் – 4,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.

* கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

* பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

பலன்கள்:

நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும்.201703181114365343 how to make samai rice kara puttu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button