கார வகைகள்

ஆத்தூர் மிளகு கறி,tamil samyal kurippu

 

mutton-curry

மட்டன் – அரை கிலோ

வெங்காயம் – 2

தக்காளி – 2

மஞ்சள் தூள் – 1/2  ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

இஞ்சி பூண்டு விழுது – 1/2  ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

        உப்பு – தேவையான அளவு

 

மசாலாவுக்கு

 

மிளகு  – 1 ஸ்பூன்

சீரகம்  – 1 ஸ்பூன்

சோம்பு – 1/2  ஸ்பூன்

வரமிளகாய் – 4

மல்லித்தூள்(அ)முழு மல்லி – 1 ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

முந்திரி – ஐந்து

ஏலக்காய் – 3

தேங்காய் – பாதி (ஒரு மூடியில்)

இஞ்சி   –  நெல்லிக்காய் அளவு

பூண்டு  –  5-6 பல்

செய்முறை

முதலில் மசாலாவுக்கு உரிய மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய், மல்லித்தூள்(அ)முழு மல்லி, பட்டை, கிராம்பு, முந்திரி, ஏலக்காய், தேங்காய், இஞ்சி, பூண்டு என அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கெள்ளவும்.

 

ஒரு பாத்திரத்தில் மட்டன், மஞ்சள் தூள், உப்பு ,வெங்காயம், மற்றும் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.

அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கெள்ளவும்.

 

கலந்து வைத்த மட்டன் கலவையை 10-15 நிமிடம் ஊறவைக்கவும்

 

ஒரு கனமான வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் நன்கு வதக்கி அதனுடன் ஊற வைத்த மட்டன் கலவையையும் சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.

 

தண்ணி தேவைபட்டால் சிறிது ஊற்றி நன்கு வேகவிட்டு புதினா கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button