சிற்றுண்டி வகைகள்

பச்சைமிளகாய் காரச் சீடை

என்னென்ன தேவை?

பதப்படுத்திய பச்சரிசி மாவு – 2-1/2 கப்,
வறுத்து அரைத்து சலித்த உளுந்துமாவு – 1/4 கப்,
பச்சைமிளகாய் – 10,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – தேவைக்கு,
வெண்ணெய் – 3/4 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் மாவுடன் கலக்க – தேவைக்கு,
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அனைத்தையும் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை பச்சரிசி, உளுத்தமாவுடன் சேர்த்து கலக்கவும். அதில் எள், வெண்ணெய், தேங்காய்ப்பால் தெளித்து பதமாக மாவைப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு துணியின் மீது பரப்பி 2 மணி நேரம் வைக்கவும். ஒரு மெல்லிய துணியால் மூடி வைக்கவும். சூடான எண்ணெயில் சீடைகளை ஒட்டாமல், கொள்ளும்வரை போட்டு மொறுமொறுவென்று பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வடித்து ஆறவிட்டு டப்பாவில் வைத்து படைத்து பரிமாறவும்.

(குறிப்பு: வெடிக்காமல் இருக்க மாவை மிக சிறு ஓட்டை உள்ள சல்லடையில் பல முறை சலிக்கவும்.)bl0Y23w

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button