சரும பராமரிப்பு

கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் குளியல் பவுடர்

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு – 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்

வெட்டி வேர் – 200 கிராம்

அகில் கட்டை – 200 கிராம்

சந்தனத் தூள் – 300 கிராம்

கார்போக அரிசி – 200 கிராம்

தும்மராஷ்டம் – 200 கிராம்

விலாமிச்சை – 200 கிராம்

கோரைக்கிழங்கு – 200 கிராம்

கோஷ்டம் – 200 கிராம்

ஏலரிசி – 200 கிராம்

பாசிப்பயறு – 500 கிராம்

இவைகளை காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குலைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் நறுமணம் வீசுவதுடன் உடல் பொலிவுடன் இருக்கும் .

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
turmeric%2Bpowder

Related posts

வேப்பிலை தயிர் கலந்த மாஸ்க் உங்கள் சருமத்தில் போட்டால் என்னாகும்?

nathan

சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துபவரா நீங்கள்

nathan

உங்க கழுத்து அழுக்கு நிறைந்து கருப்பா இருக்கா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க

nathan

குளிர்கால முக வறட்சியை போக்க

nathan

இயற்கையாக மேல் உதட்டில் உள்ள முடியை நீக்க 10 எளிய வழிகள்

nathan

தக்காளியை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்கலாம்

nathan

பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் முடி வளர காரணம்

nathan

காது அழகை பராமரிப்பது எப்படி?

nathan