சிற்றுண்டி வகைகள்

ஒக்காரை

மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மாப்பிள்ளை தலை தீபாவளி வரும் நேரத்தில் கட்டாயம் செய்வார்கள். தலை தீபாவளி இல்லாத நேரத்திலும் மதுரை மாவட்டத்தில் ஒக்காரை கட்டாயமாக தீபாவளி ஸ்பெஷலாக செய்வார்கள். இத்துடன் வெள்ளை அப்பம் கட்டாயம் இருக்கும். இதை கடலைப் பருப்பிலும் செய்வார்கள். பயத்தம் பருப்பிலும் செய்வார்கள். கடலைப் பருப்பில் செய்தால் ருசி அதிகம்.

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு – 2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்,
நெய் – 1/2 கப்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – சிறிது.

பாகிற்கு:

வெல்லம் – 2 கப்,
தண்ணீர் – 1 கப்.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, சிறிதளவுகூட தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைக்கவும். அடிகனமான கடாயில் நெய்யை சூடாக்கிப் பின் அரைத்த பருப்பை கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சவும். சிறிது கொதித்ததும், பருப்பின் மேல் கொட்டி கைவிடாமல் கிளறவும். ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த தேங்காய்ப் பல் சேர்த்து பரிமாறவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button