சிற்றுண்டி வகைகள்

பிரெட் மஞ்சூரியன் செய்ய….

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் – 4
தக்காளி – 2
வெங்காயம் – 2
சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ளுங்கள். தக்காளியை அரைத்து சாறெடுத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி சேர்த்து வதக்குங்கள். தக்காளி சாறு ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளறுங்கள். மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள். சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.1479374172 3904

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button