தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? அப்ப இத கொண்டு மசாஜ் செய்யுங்க…

தலையில் முடி நன்கு அடர்த்தியாகவும் இருந்தால் தான், அது அழகான தோற்றத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு எடுத்துக் கொண்டால், தலைமுடி நீளமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு தலையில் நீளமாக இல்லாவிட்டாலும், தலையில் கொஞ்சமாவது முடி இருக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய மோசமான சுற்றுச்சூழல் மற்றும் கெமிக்கல் நிறைந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களால், முடி வலுவிழந்து உதிர ஆரம்பிக்கிறது. தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், அதன் வளர்ச்சியைத் தூண்டவும் இயற்கை வைத்தியங்கள் கைக் கொடுக்கும்.

இங்கு தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர உதவும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், ஒரே வாரத்தில் தலைமுடி நன்கு வளர்வதைக் காணலாம்.

ஸ்டெப் #1 முதலில் 5-6 உருளைக்கிழங்கை எடுத்து, தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, மஸ்லின் துணி பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3 பின்பு தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #4 30 நிமிடம் கழித்து, தலைமுடியை நீரில் நன்கு அலச வேண்டும். ஒருவேளை தலைமுடி எண்ணெய் பசையுடன் இருந்தால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.

குறிப்பு இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை பின்பற்றி வந்தால், தலைமுடி நன்கு வளர்வதுடன், முடி நன்கு பொலிவோடும், நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.

baldhead 03 1483423341

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button