முகப் பராமரிப்பு

சிகப்பழகைத் தரும் குங்குமப் பூ

சிகப்பழமைப் பெற நினைக்கும் பெண்கள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். இந்த கலவையை நகங்கள் மீது பூசி வந்தால் நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து கருத்துப் போன நகங்கள், உடைந்து போன நகங்களை குங்குமப்பூ மற்றும் வெண்ணை கலவை சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான். அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் இந்தக் கலவையைப் பயன்படுத்தினால் புருவம் அடர்த்தியாகவும் அழகாகவும் மாறும்.

மற்ற சாதாரண மலர்களில் இல்லாத ஒரு புதுமைக்குணம் குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து இருக்கும். இந்த கருமையை நீக்க குங்குமப் பூவை பயன்படுத்தி வந்தால் நிறம் மாறி உதடுகள் அழகாகும்.
சிகப்பழமைப் பெற நினைக்கும் பெண்கள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.
இந்த குங்குமப்பூவை குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். இந்த கலவையை நகங்கள் மீது பூசி வந்தால் நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து கருத்துப் போன நகங்கள், உடைந்து போன நகங்களை குங்குமப்பூ மற்றும் வெண்ணை கலவை சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான். அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் இந்தக் கலவையைப் பயன்படுத்தினால் புருவம் அடர்த்தியாகவும் அழகாகவும் மாறும்.

மற்ற சாதாரண மலர்களில் இல்லாத ஒரு புதுமைக்குணம் குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து இருக்கும். இந்த கருமையை நீக்க குங்குமப் பூவை பயன்படுத்தி வந்தால் நிறம் மாறி உதடுகள் அழகாகும்.download14

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button