அசைவ வகைகள்

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

சப்பாத்தி, பூரி, நாண், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா சூப்பராக இருக்கும். இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா
தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

அரைப்பதற்கு.

சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 2
துருவிய தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 8
பச்சை மிளகாய் – 4
கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன்
புதினா – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 3 1/2 கப்

செய்முறை :

* புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கிய பின்னர், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்து-5 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 8 நிமிடம் கிளறி விட வேண்டும்.

* பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button