முகப் பராமரிப்பு

சுண்ணாம்பினால் எப்படி கருவளையம் மறையச் செய்யலாம் என தெரியுமா? ஒரு பாட்டி வைத்தியம்!!

கருவளையத்தை எளிதில் போக்கச் செய்யும் குறிப்பு இது. சரியாக தூக்கம் இல்லாமல் அல்லது அதிக நேரம் கணிப்பொறியை பார்ப்பது மொபைல் பார்ப்பது என கருவளையத்தை வரவழைத்துக் கொண்டீர்களா? விடுங்கள். அதனை நினைத்து பயனிள்ளை.

கருவளையம் லேசில் போகாதுதான். எத்தனையோ குறிப்புகள் பயன்படுத்தினாலும் உங்களுக்கு உபயோகம் தரவில்லையென்றால் நீங்கள் இந்த குறிப்பை பயன்படுத்திப் பாருங்கள். மிகவும் பயனளிக்கும்.

தேவையானவை :
நல்ல சுண்ணாம்பு – பட்டாணி அளவு
நீர் – ஒரு கப்
எலுமிச்சை சாறு – சில துளிகள்

செய்முறை :
வெற்றிலைக்கு உபயோகிக்கும் சுண்ணாம்பை பட்டாணி அளவு எடுத்து ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருங்கள்.

பின்னர் கிண்ணத்தில் சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும். மேலே இருக்கும் தெளிந்த நீரை 2 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே அளவு எலுமிச்சை சாறு எடுத்து சுண்ணாம்பு நீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவையை வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய நீரை தினமும் கருவளையத்தின் மீது பூசுங்கள். இவ்வாரு தினமும் 3 வேளை பூசினால் கருவளையம் மறந்துவிடும்.

11 1486793363 4apply

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button