31.1 C
Chennai
Monday, May 20, 2024
08 1431070439 1 neem
முகப் பராமரிப்பு

ஆயுர்வேத மூலிகையான வேப்பிலையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம்?

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய வேப்பிலை பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது சருமத்தில் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் பல நோய்களுக்கும் சிகிச்சையளிக்க ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு அழற்சி, நோயெதிர்ப்பு அழற்சி போன்றவை அதிகம் உள்ளது. எனவே இவற்றைக் கொண்டு சருமத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், பருக்கள், சுருக்கங்கள், தழும்புகள் மற்றும் இதர சரும பிரச்சனைகளைப் போக்கலாம். சரி, இப்போது எந்த பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் வேப்பிலையைக் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.
08 1431070439 1 neem
அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும்
ஒரு கையளவு வேப்பிலை மற்றும் துளசி இலையை வெயிலில் உலர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதில் சிறிது சந்தனப் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.
08 1431070445 2 blackheads
கரும்புள்ளி மற்றும் வெள்ளை புள்ளிகளை நீக்க.
வேப்பிலையை அரைத்து அதில் சிறிது தேன், பால் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, வாரத்திற்கு மூன்று முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்துளைகள் விரிவடைந்திருந்தால் அவை சுருங்கும் மற்றும் கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளின் பிரச்சனைகளில் இருந்து விடைபெறலாம்.
08 1431070451 3 neem
தழும்புகளை போக்க.
வேப்பிலையை நிழலில் உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி மசாஜ் செய்து, உல வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் பருக்களால் வந்த கருமையான தழும்புகளைப் போக்கலாம்.
08 1431070458 4 acne
முகப்பரு
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், அதனைப் போக்க, கொதிக்கும் நீரில் வேப்பிலையை சேர்த்து, வேப்பிலை மென்மையானதும், அதனை எடுத்து அரைத்து, அத்துடன் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்கள் போய்விடும்.
08 1431070464 5 facepack
பொலிவான சருமத்திற்கு.
சிறிது வேப்பிலை பொடியுடன், கடலை மாவு, 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து நன்கு காய்ந்ததும், குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், நிச்சயம் பொலிவான மற்றும் மென்மையான சருமத்தைப் பெறலாம்.

Related posts

முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்க சில அழகு குறிப்புகள்…!அப்ப தினமும் செய்யுங்க…

nathan

பெண்களே முகத்துல பிம்பிள் அதிகமா வருதா? அப்ப இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

டீன்ஏஜ் பெண்கள் விரும்பும் பேஷன் மூக்குத்தி

nathan

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

nathan

எளிய இயற்கை அழகு குறிப்புகள்! அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்திற்கு பாதிப்பு தரும் பொருட்கள்

nathan

சோர்வுற்ற கண்களைப் புதுப்பிக்க எண்ணெய்

nathan

முகத்தில் தேவையற்ற முடியை நீக்குவது எப்படி? இந்த ஒரு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

nathan

கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்

nathan