அழகு குறிப்புகள்முகப்பரு

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.

ஆடுதீண்டாப்பாளை இலையை எடுத்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். பசும் மஞ்சள், வசம்பு ஆகியவற்றை மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்து விழுதை ஆடுதீண்டாப்பாளை இலைச்சாற்றில் கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்கவேண்டும். மறுநாள் தேங்காய் எண்ணெயுடன் தயாரித்து வைத்திருக்கும் சாற்றை கலந்து காய்ச்ச வேண்டும்.

skincare tips for your teens 7 reasons to treat acne early

எண்ணெய் திடமாகித் தைலபதமாகும் போது இறக்கி ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். முகத்தை நன்றாக சுத்தமாக கழுவித் துடைத்த பிறகு இந்த எண்ணெயை முகத்திலிட்டு நன்கு அழுந்தத் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு பயற்றம் மாவை முகத்தில் பூசி பின்பு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.

அறிகுறிகள்:
முகத்தில் பருக்கள் காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:

ஆடுதீண்டாப்பாளை இலைச்சாறு.
பசும்மஞ்சள்.
வசம்பு.
தேங்காய் எண்ணெய்.
பயற்றம் மாவு.

செய்முறை:
ஆடுதீண்டாப்பாளை இலையை இடித்து கால் லிட்டர் அளவுக்குச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். 25 கிராம் பசும்மஞ்சள், 15 கிராம் வசம்பு, கால் லிட்டர் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். பசும்மஞ்சளையும் வசம்பையும் சிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை ஆடுதீண்டாப்பாளைச் சாற்றில் கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு மூடி வைக்கவேண்டும். மறுநாள் தேங்காய் எண்ணெயுடன் தயாரித்து வைத்திருக்கும் சாற்றை கலந்து காய்ச்ச வேண்டும். எண்ணெய் திடமாகித் தைலபதமாகும் போது இறக்கி ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். முகத்தை நன்றாக சுத்தமாக கழுவித் துடைத்த பிறகு இந்த எண்ணெயை முகத்திலிட்டு நன்கு அழுந்தத் தேய்க்கவேண்டும். எண்ணெய் அரை மணி நேரம் ஊறிய பிறகு பயற்றம் மாவை முகத்தில் பூசி பின்பு சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button