ஆரோக்கிய உணவு

நீங்கள் சமையலுக்காக எந்த எண்ணெய் பயன்படுத்துறீங்க?

”சமையலுக்கு ரீபைண்ட் ஆயில்தான் பயன்படுத்தணும், செக்கு எண்ணெயில அதிகப்படியான கொழுப்பு இருக்குனு பரபரப்பா விவாதம் போயிட்டு இருந்து, இப்போ  செக்கு எண்ணெய்தான் நல்லதுனு சொல்றங்க. இதுல எத நம்புறது ? தீடிர் தீடிர்-னு எதையாது கிளப்பிவிட்டுறாங்க”. என்று நிறைய மக்கள் புலம்புகிறார்கள். அப்படியே புலம்பினாலும், இயற்கையை நோக்கி திரும்புவதுதான் நல்லதென எல்லோரும் உணர ஆரம்பித்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் இந்த மரச் செக்கு எண்ணெய். இதைத்தான் நமது முன்னோர்கள் சமையலில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால், தற்போது நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி  எண்ணெய்  என்பது சமையல் எண்ணெய் என்பதைக் காட்டிலும் உண்மையில் இது மினரல் ஆயில் மட்டுமே.

ரீபைண்ட் ஆயில் என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.   இதனால், எண்ணெயிலிருந்து இயல்பாக கிடைக்ககூடிய கொழுப்புச் சத்து கிடைப்பதில்லை. கொழுப்புச் சத்து உடல் கட்டமைப்புக்கு தேவையான மூலக்கூறுகளில் ஒன்றாகும்.  மேலும், ரீபைண்ட் ஆயிலை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் உடலுக்கு நோயை கொண்டு வந்து சேர்க்கின்றன. ஆனால், செக்கில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் என்றும் உடலுக்கு கேடு விளைவிக்காது.

மரச்  செக்கு எண்ணெயில் சமைக்கப்படும் உணவுப் பொருளின் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.  உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றும் கூட. பொதுவாக ஒரு நாளைக்கு மனிதனுக்கு 20-25% கொழுப்புச்சத்து தேவைப்படுகிறது. எண்ணெயில் இருக்கும் மூலப் பொருட்கள் இரைப்பை, குடல், மூட்டு ஆரோக்கியமாக இருப்பதற்கும், தோல்  மிருதுவாக இருப்பதற்கும், ரத்த நாளங்கள் சீராக இயங்குவதற்கும் உதவுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கருப்பையில் ஏற்படக்கூடிய கட்டிகளைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது மரச் செக்கு எண்ணெய். ஒவ்வொரு எண்ணெயிலும், தனித்துவமான சத்துக்கள் இருந்து உடலை அரண் போல் பாதுகாக்கின்றன. தேங்காய் எண்ணெயை  உணவில் சேர்க்கும்போது, நோய்கிருமிகள் உடலை அண்டாது. கடலை எண்ணெயிலிருக்கக் கூடிய வைட்டமின்ஸ் மற்றும்  மினரல்ஸ் இதயத்திற்கு பலமளிக்கிறது. கடலை எண்ணெயில்  உள்ள ”நியாசின்” ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைக்கிறது.  இதிலிருக்கும் வைட்டமின்-E சருமத்தை பாதுகாக்கிறது.  இதுபோல ஒவ்வொரு எண்ணெயிலிருக்கும் சத்துக்களும், மரச் செக்கு எண்ணெயில் முழுமையாக  கிடைக்கிறது.

மரச் செக்கு எண்ணெய் அடர்த்தி மிகுந்தது என்பதால், 4 பேர் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு  மாதத்திற்கு  3 லிட்டர் எண்ணெய்  போதுமானது. அதே, 4 பேர் கொண்ட குடும்பம், ரீபைண்ட் ஆயிலை பயன்படுத்துமாயின் ஒரு மாதத்திற்கு 5லிட்டர் எண்ணெய் தேவைப்படும். ரீபைண்ட் ஆயில் ஒரு வருடம் வரை கெடமால் இருக்கும். விலையும் குறைவு. ஆனால், மரச் செக்கு எண்ணெய் ஆறு மாத காலம் கெடாமல் இருக்கும். இயற்கைப் பொருட்களைக் கொண்டு கலப்படம் இல்லாமல் தயாரிப்பதாலேயே, விலையும் சற்று அதிகம். மாத்திரை மருந்து, துரித உணவு, இவற்றின் விலையோடு ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டும் அள்ளித்தரும். மரச் செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணர மாட்டோம்.

மரச் செக்கு எண்ணெய்கென்று பிரபலமான நிறுவனம் ஈரோட்டைச் சேர்ந்த ஸ்டாண்டார்ட்’ கோல்டு ப்ரெஸ்டு ஆயில். மரச் செக்கு எண்ணெய் மட்டுமல்லாது, மலைத்தேன், நாட்டுச் சர்க்கரை, செப்பு பாத்திரம் போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள். இணையதளம் மூலம் இவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் வசதி உள்ளது. இந்தியா முழுவதும் டோர் டெலிவரி செய்யப்படும்.

மரபுவழியில் மக்களுக்கு தேவையான எண்ணெயை  தயாரித்து கொடுக்கும் ஸ்டார்ண்டார்ட் நிறுவனத்தினர் விகடன் வாசகர்களுக்கு சிறப்பு சலுகை கொடுக்குறாங்க,  ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்யும் விகடன் வாசகர்களுக்கு, இலவச டெலிவரியுடன், ரூபாய் 120 மதிப்புள்ள நாட்டுச் சர்க்கரை இலவசம்!Standard cold pressed oil 13313

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button